Friday, October 29, 2021

தன் பக்தனின் கடனை அடைத்த. அம்பிகை....!

 தன் பக்தனின் கடனை அடைத்த. அம்பிகை....!


அந்த தேவி உபாசகர் ஒரு முறை, செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி , குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார் ....


.ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை !...


ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம் .


கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க ....


அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் ...கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட. ஆரம்பித்தார் !


அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து  

" உங்களுக்கு பணம் தானே வேண்டும் ? ..கூச்சல் போடாதீர்கள் !..அரை நொடியில் பணத்துடன் வருகிறேன் ...''


மிிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள் , சொல்லி வைத்தாற்போல் அரை நொடியில் வந்தாள் , ஒரு சிறு பை சகிதம் .;

..பின் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே,


'' இதோ பாருங்கள் ..இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான , வட்டியும் உள்ளன !


.பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு ,பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் ! ''....


புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு அந்த அம்மாள் உள்ளே செல்ல ..


செல்வந்தரும் பை, பத்திரம் சகிதம் வீட்டுதிண்ணையிலேயே அமர்ந்து கொண்டார் ..


சற்ற்றைக்கெல்லாம் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் , அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்பு மேலிட ,


'' அடடே ...உங்களை கவனிக்க வில்லை ....மன்னியுங்கள் ! ''

பிரசாத தட்டை நீட்டியவாறு மெல்லிய குரலில் பேசியவரை பேச விடவில்லை அந்த செல்வந்தர் ..


'' முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் ! ''...

அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஏகத்துக்கு ஆச்சரியம் !.புருவம் முடிச்சிட , 


.'' நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே ?..''

'பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர் ;


'' உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு , பத்திரத்தையும் உங்களிடம் கொடுக்க சொன்னார் !''


ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் , பின் மனைவியை அழைத்து , 


'' நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே ...உண்மையா ?.....''

என்று வினவ ....


அந்த அம்மையாரோ திகைப்புடன் ,


'' அய்யோ ...நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன்...?..இது எப்படி சாத்தியம் ? ''


என்று அரற்றிய அக்கணம் ...


பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி !

'' நான் தான் பணம் கொடுத்தேன் !''..

குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைய,


அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு எதுவும் இல்லை!


இப்போது சகலமும் புரிந்து போயிற்று அந்த தேவி உபாசகருக்கு ;

கடனை அடைக்க , தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் ! அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி !


'' உங்கள் மேன்மை தெரியாமல் தவறாகபேசிவிட்டேன் ...

மன்னியுங்கள் !'' கண்கள் பனிக்க , செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார் !


அந்த தேவி உபாசகர் வேறு யாருமில்லை ..

லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர்  தான் ! 


அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது ! 


தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே ,காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர் இவர் ! 


தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் , பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.!

No comments:

Post a Comment