Showing posts with label DEVOTIONAL CONTENT. Show all posts
Showing posts with label DEVOTIONAL CONTENT. Show all posts

Sunday, August 22, 2021

வெள்ளியங்கிரி சிவபெருமான்

 


வெள்ளியங்கிரி சிவபெருமான்   !பூலோகத்தில் தென்கயிலாயம் என்று சிவன் அருளிய, பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வந்த அவர், வெள்ளியங்கிரி மலையாக நின்ற ஈசனை மெய்மறந்து வணங்கினார். இந்த மலை கோவை பேரூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ளது. அந்த திருமாலின் திருமந்திரம் முழங்கும் நாரதர், முருகப்பெருமான் வாயிலாக சிவனின் தென் கயிலாயத்தை பற்றி அறிந்ததும், அதை தரிசிக்கும் ஆவல் கொண்டார்.

    அதற்காக அவர் பூலோகம் வந்தார். பூலோகத்தில் தென்கயிலாயம் என்று சிவன் அருளிய, பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வந்த அவர், வெள்ளியங்கிரி மலையாக நின்ற ஈசனை மெய்மறந்து வணங்கினார். இந்த மலை கோவை பேரூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ளது.  ஓம் நமோ நாராயணா' என்று அணுநேரமும் திருமாலின் திருமந்திரத்தை உச்சரிக்கும் நாரதர், சிவபெருமானை வழிபட்ட தலம் இது.இன்று 22/8/2021 ஞாயிறு பௌர்ணமி அன்று  பதிவு செய்து வணங்குகின்றோம். சிவாயநம.

    ஒரு முறை திருமாலின் கையில் இருந்த திருச்சக்கரம் செயலிழந்து விட்டது. ஆதலால் ஜலந்தாரன் என்ற அசுரனை வதம் செய்ய சக்கரம் வேண்டி ஈசனை வழிபட்டார் திருமால். தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு வழிபட்ட திருமாலுக்கு, ஒருநாள் ஆயிரம் மலர்களில் ஒன்று குறைந்தது. எனவே தனது வலது கண்ணை, தாமரையாக பாவித்து ஈசனுக்கு அர்ச்சித்தார். இதையடுத்து அவருக்கு சிவபெருமான் சுதர்சன சக்கரத்தை வழங்கினார்.

    அந்த திருமாலின் திருமந்திரம் முழங்கும் நாரதர், முருகப்பெருமான் வாயிலாக சிவனின் தென் கயிலாயத்தை பற்றி அறிந்ததும், அதை தரிசிக்கும் ஆவல் கொண்டார்.

    அதற்காக அவர் பூலோகம் வந்தார். பூலோகத்தில் தென்கயிலாயம் என்று சிவன் அருளிய, பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வந்த அவர், வெள்ளியங்கிரி மலையாக நின்ற ஈசனை மெய்மறந்து வணங்கினார். இந்த மலை கோவை பேரூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ளது.

  திருவெள்ளியங்கிரி மலை மீது ஏறி உமாதேவி சமேதராக காட்சியளித்த சிவனையும், விநாயகர், முருகப்பெருமானையும் தரிசித்தார். அது மட்டுமின்றி அதற்கு மேற்கு திசையில் எழுந்தருளிய சிவலிங்கத்திற்கும் பூஜை செய்து வழிபட்டார். பின்னர் பேரூர் திருத்தலம் வந்தார். உத்தர வாகினியாக ஓடிய காஞ்சிமாநதியில் புனித நீராடி, அரச மரங்கள் சூழ எழுந்தருளியிருந்த ஆதிலிங்க மூர்த்தியை கண்டு உணர்ந்து மலர்கள் தூவி தரிசித்தார்.

    பிறகு காஞ்சிமா நதிக்கரையோரம் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார். தினமும் காஞ்சிமாநதியில் புனித நீராடி, தான் உருவாக்கிய தீர்த்தத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார். இந்த வழிபாட்டின் பலனாக ஈசனின் பரிபூரண அருளை நாரதர் பெற்றார்.

    நாரதர் வழிபட்ட லிங்கம் ‘நாரதேஸ்வரர்’ என்றும், தீர்த்தம் ‘நாரத தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. கால வெள்ளத்தில் நாரதர் வழிபட்ட நாரதேஸ்வரரும், தீர்த்தமும் அழிந்து விட்டது. ஆனால் அவர் வழிபட்ட ஆதிலிங்க மூர்த்தி, பட்டீசுவரராக எழுந்தருளி உள்ளார். அவரை தரிசிக்க நாம் பேறு பெற்று உள்ளோம்.

    பிரம்மனின் புத்திரர் காஸ்யப முனிவர். இவரது மகன் காலவ முனிவர். இவர் சிவபக்தியில் சிறந்து விளங்கினார். நன்மை, தீமை, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்து பேரின்பத்தை அடைய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று.

    சிவபெருமானின் மற்ற மூர்த்தங்களை விட, அனைத்திற்கும் மூலமாக, அருவுருவ திருமேனியாக விளங்கும் சிவலிங்க மூர்த்தியை வணங்கினால் வீடுபேறு என்னும் முக்தி கிடைக்கும் என்பதை அறிந்து, சிவலிங்கத்தை வழிபட முடிவு செய்தார் காலவ முனிவர்.

    ஈசன், சிவலிங்க திருமேனியாய் எழுந்தருளிய திருத்தலங்களில் எது சிறந்தது? என்பதை அறிய, சிவன் எழுந்தருளியிருக்கும் இடமெல்லாம் சென்று வழிபடத் தொடங்கினார். காஞ்சிமா நதி ஓடும் ஆதிமாபுரம் என்று அழைக்கப்படும் திருப்பேரூரை அடைந்ததும், காலவ முனிவரின் வலது கண்ணும், வலது தோளும் தானாகத் துடித்தன. துன்பங்கள் நீங்கச் செய்யும் இந்த இடமே நாம் வழிபடுவதற்கு ஏற்றது என்று மகிழ்ந்தார்.

    காஞ்சிமா நதியில் புனித நீராடி ஆதிலிங்க மூர்த்தியான பட்டீசுவரரை தரிசித்தார். வேத, மந்திரங்கள் உச்சரித்து வணங்கினார். அன்று முழுவதும் சிவசிந்தனையில் ஆழ்ந்தார்.

    மறுநாள் காலையில் எழுந்து காஞ்சிமாநதி கரையோரம் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கினார். அந்த தீர்த்தத்தில் இருந்து தினமும் சிவலிங்க திருமேனிக்கு அபிஷேகம் செய்து, 16 ஆயிரம் முறை பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வந்தார். இப்படியே 16 ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்தார். காலவ முனிவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், அவர் கண்முன் தோன்றினார்.

    காலவ முனிவரே! யாம் உமது தவத்தை மெச்சினோம். யாது வரம் வேண்டும். கேளீர்' என்றார்.

    இதைக் கேட்ட காலவ முனிவர், ‘எம்பெருமானே! இந்த பூத உடலில் உள்ள மலங்களை நீக்கி, உன் திருவடியை நாடும் பாக்கியம் பெற்ற விடுபேறை வழங்கி அருள்புரிவாயாக' என்றார்.

    ‘யாம் அந்த வரத்தை தந்தோம். இந்த வெள்ளியங்கிரியில் வெள்ளியம்பலம் ஒன்று உள்ளது. அதை வழிபடுகிற அன்பர்களின் வினைகள் தீரும் பொருட்டு நாள்தோறும் அனபரத ஆனந்த தாண்டவம் செய்கிறோம். நீங்கள்! இங்கு எழுந்தருளிய அரசம்பலவாணரை வழிபட்டு காத்திருங்கள். பிரம்மன், விஷ்ணு, யாம் இங்கு நடனம் ஆடும் திருக்காட்சியை தரிசிக்க உள்ளனர். நீங்களும் அந்த நடன காட்சியை தரிசித்து இப்பூத உடல் அழிந்து விடுபேற்றை பெறுவீர்கள்’ என்று அருள்பாலித்தார்.

  அதன்படியே அங்கேயே கடும் தவம் இருந்து, பின்னாளில் சிவபெருமானின் அந்த திருக்கூத்தை கண்டுகளித்து வீடு பேற்றை அவர் பெற்றார்.

    காலவ முனிவர் ஸ்தாபித்த கோவிலுக்கு காலவேஸ்வரம் என்றும், அவர் ஏற்படுத்திய தீர்த்தத்திற்கு காலவ தீர்த்தம் என்றும் பெயர். இன்றும் அவர் ஸ்தாபித்த லிங்கத்திருமேனியை தரிசிக்கும் பாக்கியம் நமக்கும் கிடைத்திருக்கிறது.

    இந்த திருத்தலம் தற்போது உள்ள பேரூர் பட்டீசுவரர் கோவிலில் இருந்து வடகிழக்கில் உள்ளது. அது அரசம்பலவாணர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. காலவ முனிவர் ஏற்படுத்திய தீர்த்தத்தையும் அங்கு பார்க்கலாம். அந்த தீர்த்தத்தில் இருந்து தான் இன்றும் அந்த கோவிலில் அரசம்பலவாணருக்கு நித்ய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதை பேரூர் கோவிலின் ‘சின்னக்கோவில்’ என்று அழைக்கின்றனர்.

சிவாயநம

அருள்மிகு லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில்

 தினம் ஒரு திருத்தலம் : கிழக்கு நோக்கிய பெருமாள்... அற்புதமாக காட்சி தரும் தலம்.!!

கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில் ஆகும். அங்கேதான் திருமணத்திற்கு வந்த தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றாராம். அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது.



கோயில் சிறப்பு :


பொதுவாக கோயில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.


இதற்கு காரணம் தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தபோது, மைத்துனராக விஷ்ணு திருமணத்தை நடத்தி வைக்க, மேற்கு நோக்கி அமர்ந்தார் என காரணம் சொல்கின்றனர்.


சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது.


கையில் அமிர்தகலசம் தாங்கிய கோலத்தில் வடக்கு நோக்கி தன்வந்திரி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.


தம்பதி சமேதராக இருந்து சிவ-பார்வதியும், ஸ்ரீலட்சுமியும்-ஸ்ரீநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இதுவாகும்.


இக்கோயிலில் தும்பிக்கையாழ்வார், வீர ஆஞ்சநேயர், கிருஷ்ணர், கருடாழ்வார், ஐந்து தலைநாகர், ராமானுஜர் சந்நிதிகள் உண்டு.


கோயில் திருவிழா :


வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கருட ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகியவை கொண்டாடப்படுகிறது.


வேண்டுதல் :


சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும். ராகுதோஷம் உள்ளவர்கள் ஐந் துதலை நாகருக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுகின்றனர்.


நேர்த்திக்கடன் :


ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வடைமாலை சாற்றியும், நாகருக்கு ராகுகாலத்தில் தீபமேற்றியும், தன்வந்திரிக்கு நெய் தீபமேற்றியும் வழிபாடு செய்கின்றனர்.

மோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கொண்டாவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது.


இங்கு தாயார் ரங்கநாயகிவுடன் பள்ளிக்கொண்டா பெருமாள் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவர் சாளகிராமத்தால் ஆனவர்.


இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் சிறப்பாக நடக்கவும் பிரிந்த தம்பதிகள் சேரவும் இங்கு திருமணம் செய்தால் மணம் ஒத்து வாழ்வார்கள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.


பிராத்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்மபாளும் திருமஞ்சனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.


வராஹ அவதாரம் எடுத்தப் கூடலூர் வையங்காத்த பெருமாள் சிறப்புக்கள்


சோட்டா ரங்கநாதர்


அந்நியர் படை எடுக்கும் போது இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு சிறிய ரங்கநாதர் சிலை செய்து கோயிலில் பாதுகாக்கப்பட்டது.


இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கு பூஜைகள் செய்யப்படுகிறது இவர் சோட்டா ரங்கநாதர் எனப்படுகிறார்.


இரவு தங்கி பெருமாளை வழிப்பட்டால் மோட்சம் கிடைக்கும்



பெருமாளுக்கு உதவியாக இருந்து வந்த ஆதிஷேசன் இத்தலத்தில் தான் முதல் முறையாக அவரை தன்னீல் சயனிக்க வைத்தார் என்கிறது தல புராணம்.


பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால். இத்தலத்து ஆறுக்கு பாலாறு என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒரு நாள் இரவு தங்கி பெருமாளை வழிப்பட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது.


பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம்


மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர்.


மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள்.


இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள்.


எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.


இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘க்ஷீரநதி’ என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள்.


இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார்.


முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார்.


2017 சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார்.


பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் ‘பள்ளி கொண்டான்’ எனப்பட்டது. பெருமாள் ‘உத்தர ரங்கநாதர்’ எனப்படுகிறார்.


இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை.


அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது.


இவர் ‘சோட்டா ரங்கநாதர்’ எனப்படுகிறார். தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார். உள்பிரகாரத்தில் உடையவர், ராமர், நவநீதகண்ணன், ஆண்டாள், அனுமன், மணவாள மாமுனிகள், கருடாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் சன்னதிகள் உள்ளன.


இக்கோயிலுக்கு தெற்கே 2 கி.மீ. தூரத்தில் பீஜாசலம் என்ற மலைக்குன்று உள்ளது.


திருவிழா


சித்திரையில் பிரமோற்ஸவம், வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவாடிப்பூரம். கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி. திருக்கார்த்திகை. வைகுண்ட ஏகாதசி. தை மாதம் கிரிபிரதட்சணம். மாசி தெப்பம். பங்குனி உத்திரம்.


காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


அமைவீடம்


வேலூரில் இருந்து பள்ளிக்கொண்டா 30 கி.மி தொலைவில் உள்ளது இங்கு செல்ல பேருந்து வசதி உள்ளது .

சக்தி சக்கர பயிற்சி

 நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் உங்கள் வாழ்க்கையை, நிஜத்திலும் வாழவேண்டும் என்று நினைக்கிறீர்களா? சக்தி சக்கர பயிற்சி செய்யுங்கள். 

CHAKRA

        பொதுவாகவே ஒரு மனிதனுக்கு இரண்டு வாழ்க்கை இருக்கும். ஒன்று அவன் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை. மற்றொன்று நிஜத்தில் வாழும் வாழ்க்கை. சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், பணக்கார வாழ்க்கையை கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 

    பணக்கார வாழ்க்கையை நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்றால், கோடான கோடீஸ்வரர் வாழ்க்கையை கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நோய் நொடியோடு நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று கற்பனை இருக்கும். இப்படியாக ஒருவருடைய கற்பனையான வாழ்க்கையை, நிஜத்தில் எப்படி கொண்டு வருவது?

    முதலில் விடா முயற்சி எடுக்க வேண்டும். தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. நம்முடைய கற்பனையான வாழ்கையை தினம் தினம் நம் மனதில் நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் எது ஒன்றை விதைக்கிறோமோ, அதுதான் வளர்ந்து விருட்சமாகி நிற்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சரி. நம்முடைய கற்பனையான வாழ்க்கையை நிஜமாக மாற்ற வேண்டும் என்றாலும், நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களில் ஏதாவது தீரவேண்டும் என்றாலும், அல்லது உங்கள் மனதில் எப்படிப்பட்ட ஒரு கோரிக்கை இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து ஒரு பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அதை விரைவாகவே நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று சொல்கிறது இந்த சக்தி சக்கர பயிற்சி.

    இந்த பயிற்சியை முறையாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்களுக்கு சௌகரியமான இடத்தில் அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களது இரண்டு கண்களையும் 5 நிமிடம் மூடிக்கொண்டு, உங்களது கண்களையே கவனிக்க வேண்டும்.

    அதாவது உங்களது கவனம் வேறு எங்கும் சிதற கூடாது. உங்கள் கண்களின் மீது தான் இருக்க வேண்டும். 5 நிமிடத்திற்கு பின்பு கண்களை திறக்க வேண்டாம். உங்களது கண்களை மிகவும் மெதுவான முறையில் திறக்க வேண்டும். கண்களை திறந்ததும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சக்தி சக்ராவின் மையப் புள்ளியை உற்று நோக்குங்கள், மூன்று நிமிடம் வரை.

    அதன்பின்பு திரும்பவும் உங்களது கண்களை 3 நிமிடம் மூடிக் கொள்ளுங்கள். மூன்று நிமிடம் கழித்து மீண்டும் சக்கரத்தை காண வேண்டும். இப்படியாக கண்களை மூடிக் கொள்ளும் அந்த சமயத்தில், உங்களது ஆசையை, கற்பனையான வாழ்க்கையை வாழ்வது போன்ற பாவனை செய்து கொள்ள வேண்டும். அதாவது உங்களுக்கு சொந்த வீடு கட்டி அதில் வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அந்தக் காட்சியை உங்கள் கண்களுக்கு முன்பு கொண்டு வாருங்கள்.

    ஒருவரிடம் இருந்து கடன்தொகை வசூலாக வேண்டும் என்றாலும் கூட, அவரிடமிருந்து அந்த கடன் தொகை உங்கள் கைகளுக்கு வருவது போன்ற பாவனையை செய்துகொள்ளுங்கள். தீராத நோய் தீர வேண்டும் என்றாலும் அந்த நோய் தீர்ந்துவிட்டது என்ற பாவனை செய்து கொள்ளலாம். இப்படியாக பல வகைப்பட்ட பிரச்சினைகளுக்கும் இந்த பயிற்சியின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

ஏதாவது ஒரு ஆசையை தான் நிறைவேற்றுவதற்காக பயிற்சி எடுக்க வேண்டுமே தவிர, பல பிரச்சனைகளை போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. ‘இப்படியாக தொடர்ந்து கண்களை மூடுவதும், அதன் பின்பு சக்கரத்தைப் பார்த்தும் என்ற சுழற்சியில், உங்களது பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். (கண்களை மூடும் போது உங்களது ஆசையை பாவனை செய்துகொள்ள வேண்டும். கண்களை திறக்கும் போது சக்தி சக்கரத்தை மையப்புள்ளியை உற்று நோக்க வேண்டும். அவ்வளவுதான் பயிற்சி.) தினம்தோறும் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கின்றதோ, அந்த நேரத்தில் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். தொடர்ந்து இதே போன்று 20 நிமிடம் பயிற்சியை தொடர வேண்டும்.

    தினம்தோறும் இந்த பயிற்சியை செய்து வந்தால், நீங்கள் கற்பனை செய்து வரும் அந்தக் காட்சியானது விரைவில் வெற்றி அடைய கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்படும். இந்த பயிற்சி அறிவியல்ரீதியான உண்மையும் கூட. ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் நடந்து முடிந்துவிட்டது போல் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். நடக்க வேண்டும் என்றவாறு கற்பனை செய்துகொள்ளுங்கள். நடந்து முடிந்த விஷயமாக கற்பனை செய்யும் பட்சத்தில், அது நம்முடைய மனதை விட்டும், மூளை விட்டும் விரைவாகவே நீங்கிவிடும்.

    எடுத்துக்காட்டாக ஒரு பொருளை அடையும் வரையில் தான் அதன் மேல் நமக்கு அதிகமான ஈடுபாடு இருக்கும். அந்த பொருள் நமக்கு கையில் கிடைத்து விட்டது என்றால், அதன் மேல் உள்ள ஆசையானது குறைந்து கொண்டே போகும். இது இயற்கையான ஒன்று. முறைப்படி இந்த பயிற்சியை செய்து வருவதன் மூலம், சக்தி சக்கரத்திற்கு எத்தனை ஆற்றல் உள்ளது என்பதை உங்களால் அனுபவபூர்வமாக உணர முடியும்.

Sunday, July 25, 2021

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோவில்:- திருவயிந்திரபுரம்.

 திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த பெருமை வாய்ந்த திருத்தலம்!!!.

ஹயக்ரீவர் முதன் முதலில் தோன்றிய தலம்!!.

தலதீர்த்தமான கருட தீர்த்தம் சிவப்பு நிறத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்!!!.

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோவில்:-  

திருவயிந்திரபுரம்.

மூலவர்: தெய்வநாயகன்

தாயார்: ஹேமாம்புஜவல்லி, வைகுண்ட நாயகி

உற்சவர்: தேவநாதன், திவிஷந்நாதன், வபுதநாதன், தாஸஸத்தியன், அடியார்க்கு மெய்யன்.

கோலம்: நின்ற திருக்கோலம் 

திசை: கிழக்கு 

விமானம்: சுத்தசத்வ விமானம், சந்திர விமானம் 

தீர்த்தம்: சேச தீர்த்தம், சந்திர தீர்த்தம், கருட நதி. 

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 

நாமாவளி: ஸ்ரீ வைகுண்ட நாயகீ (ஹேமாம்புஜவல்லி தாயார்) ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ

ஊர்:  திருவயிந்திரபுரம், திருஅயிந்தை

 



இலக்கியச் சான்று :-

எங்கும் நிறைந்துள்ள எம்பெருமானாகிய இறைவன் நாராயணன் பெருமைகளையும், சிறப்புகளையும் கூறும் புராணங்கள் ஏராளம். அவ்வகையில் 18 புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் ஐந்து அத்தியாயங்களும், ஸ்காந்த புராணத்தில் நான்கு அத்தியாயங்களும், ப்ரகன் நாரதீய புராணத்தில் ஐந்தோ அத்தியாயங்களும், இத்தலத்தைப் பற்றிய பெருமைகள் பேசப்படுகின்றன.

திருவயிந்திரபுரம் பெயர்க் காரணம் :-

ஒருமுறை சனகர், சநந்தனர் ஆகிய இரு முனிவர்கள் இறைவன் நாராயணன் மீது மிகுந்த பக்தி கொண்டு அவரை காணும் வழியை அறியாது தவித்தனர்.  ஒருநாள் இவர்களைக் கண்ட வியாச முனிவர் திருக்குடந்தையிலிருந்து ஆறு யோசனை தொலைவில் அமைந்துள்ள "ஔசதகிரி" என்ற மருந்து மலைக்கு அருகில் உள்ள கருட நதிக்கரையில் தவமியற்றினால் இறைவன் காட்சி தந்து அருளுவதாக ஆலோசனை கூறினார்.  

அவ்வாறே இரு முனிவர்களும் இத்தலம் வந்து பல காலங்கள் தவமியற்றினர்.  அவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் அற்புத வடிவினனாகக் காட்சி தந்து அருளினார்.  ஔசதகிரிபுரம் என்பதே பிற்காலத்தில் ஆயிந்திரபுரம் என்றானது.  திருமால் இங்கு அவதரித்ததனால் "திருவயிந்திரபுரம்" என்றானது.

 தேவநாதன் பெயர்க்காரணம் :-

ஒருமுறை தேவர்களைக் காக்கும் பொருட்டு திரிபுர அசுரர்களை ஒழிக்க மும்மூர்த்திகளும் ஒன்றாக இணைந்து அழித்தனர். அசுரர்களை அழித்த இறைவனை தேவர்கள் அனைவரும் வணங்க மும்மூர்த்திகளும் ஓர் மூர்த்தியாக இத்தலத்தில் காட்சி தந்து அருளியதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.  

தேவர்களைக் காத்த நாதன் என்பதால் இத்தல இறைவனுக்கு "தேவநாதன்" என்ற திருநாமம் உண்டாயிற்று.

 குதிரை முக ஹயக்ரீவர் :-

குதிரை முகம் கொண்ட ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் முதன்முதலில் தோன்றிய தலம் இதுவாகும்.  

பிரம்மாவிற்கு ஞானத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ஹயக்ரீவர் பற்றிய குறிப்புகள் எதுவும் ஆழ்வார் பாசுரத்தில் இடம்பெறவில்லை.  இதன் காரணமாக, பிற்காலத்தில் தான் "ஹயக்ரீவர்" தோன்றியிருக்கக் கூடும் என்பதை நம்மால் அறியமுடிகிறது.

மேலும், இத்திருத்தலத்தில் நரசிம்மர் சுவாமியும் தனியாக சன்னதி கொண்டு அருள்கிறார்.

 சேஷதீர்த்தத்தின் சிறப்பம்சம் :-

ஸ்ரீமந்நாராயணனுக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வருமாறு கூறினார்.  அவர் தண்ணீர் எடுத்து வரத் தாமதம் ஆனதால், பெருமாளின் தாகத்தைத் தீர்க்க ஆதிசேஷன் தன் வாலால் அடித்து நதியை உண்டாக்கி பெருமாளுக்குத் தீர்த்தம் தந்தார். 

அதன் காரணமாக இங்குள்ள தீர்த்தத்திற்கு "சேஷ தீர்த்தம்" என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனைக் கிணறு ஆகும். இந்தக் கிணறானது  திருக்கோவிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. இந்த கிணற்றில் உப்பு, மிளகு, வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்.


இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் "பிரம்மாச்சலம்" என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ளது.


 கருடதீர்த்தத்தின் சிறப்பம்சம் :-


கருடாழ்வாரைப் பெருமாள் தண்ணீர் கொண்டு வரச் சொன்ன பின்பு,  கருடாழ்வார் தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் ஆதிசேஷன் தன் வாலால் தீர்த்தம் கொடுத்தான் பரந்தாமனுக்கு.


கருடன் கொண்டு வந்த தீர்த்தமே "கருடநதி" என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது. 


தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் உண்டாகும்.  


ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது.


 சிறப்புகள் :-


திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் ஓத்தலத்திற்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.  தினமும் ஆறு கால பூஜைகள் வைணவ ஆகமத்தின் படி இங்கு நடக்கிறது.


பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம்.


தெய்வனாயனார், ஹயக்ரீவர், நரசிம்மர் ஆகிய மும்மூர்த்திகள் காட்சி தந்து அருளும் தலம்.


இத்திருத்தலம் நடு நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்றது.


கலியனாலும், நிகமாந்த மகா தேசிகனாலும் பாடப்பெற்றுள்ளது.


வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் "ஸ்ரீ தேசிகன் திருமாளிகை" என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது.


வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம்.


வேதாந்த தேசிகன் பெருமாளை நாயகா, நாயகி பாவத்தில் (பெருமாள் - நாயகன் தேசிகன் - நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார்.


தன் விக்ரத்தைத் தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது.


யுகம் கண்ட பெருமாள் என்று இத்தல பெருமாள் போற்றப்படுகின்றார்.


திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம். 


வழித்தடம்:-


கடலூர் நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.


அருள்மிகு தெய்வ நாயகன் திருவடிகளே சரணம்.

அருள்மிகு வைகுண்ட நாயகி திருவடிகளே சரணம்.

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருஉருவ சந்நிதிக்கு முன்பு உபதேசம் கேட்ட நந்திபகவான் !

 மாயவரம் வள்ளலார் கோயில் எங்குமே காணமுடியாத ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருஉருவ சந்நிதிக்கு முன்பு உபதேசம் கேட்ட நந்திபகவான் !தரிசித்து மகிழ்வோம் !

 ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருவடிகளே போற்றி

 

அகரம், கோவிந்தவாடி என்ற தலத்தில் தட்சிணாமூர்த்திக்குத் தனிக்கோயில் உண்டு. கல்வி மேன்மை அருளும் மயிலாடுதுறை வள்ளலார் கோயில் இது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுவார். இவர் ரிஷபத்தில் அமர்ந்திருக்கிறார். சோழர்கால கல்வெட்டுகளில் ‘அறமுரைத்த பட்டர்’ என இவரைச் சிறப்பித்துள்ளனர். 


SRI DHAKSHINAMOORTHY


கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில்

 கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில்

   

தஞ்சை நகருக்குள், தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கலியுக வேங்கடேசப் பெருமாள் கோவில் பல வகைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. 


தஞ்சாவூரில் ஏராளமான சைவ, வைணவ ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் தஞ்சை நகருக்குள், தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில் பல வகைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. 


எல்லா கோவில்களிலும் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும், நுழைவு வாசலும் இருக்கும். 


ஆனால் இந்த ஆலயத்தில் வடக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம் ஒன்று தான் நுழைவு வழி. பெருமாள் கோவில்களில் எல்லாம் வடக்குவாசல் என்பது வைகுண்ட ஏகாதசி அன்று ‘சொர்க்கவாசல்’ என்ற பெயரில் திறக்கப்படும். 


இங்கே வடக்கு வாசலே நுழைவு வாயிலாக இருப்பதால் ‘நித்திய சொர்க்கவாசல்’ என்று அழைக்கப்படுகிறது. 

 

உள்ளே மகா மண்டபத்துக்குள் வடக்கு கோபுர வாசல் வழியே நுழைந்தால், விநாயகர் - நாகர் சிலைகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. அதே வரிசையில் கருடாழ்வார் மேற்கு பார்த்த படியும், மூலவரை வணங்கிக் கொண்டிருக்கிறார். 


சதுர்ப்புஜ வரதராஜ பெருமாளுடன் லட்சுமி தேவி அமர்ந்திருக்க, பக்கத்தில் பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் அருள்கிறார். 


இவர் மணிகட்டிய வாலை தலைக்கு மேல் உயர்த்தியபடி, இடது கரத்தில் கடிமலர் ஏந்தி, வலக்கரத்தால் ஆசி வழங்கியபடியும் வீற்றிருக்கிறார். 


வழக்கமாக இறைவனின் கருவறை முன்பாக இருக்கும் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இந்த ஆலயத்தில் இருக்கும் துவார பாலகர்கள் ‘தீர்த்தர் - கிஷ்கிந்தர்’ என்று அழைக்கப்படுகிறார்கள். 


அஷ்ட லட்சுமிகளின் உருவம் செதுக்கப்பட்ட மணிக் கதவினைத் தாண்டி, அர்த்த மண்டபத்துக்குள் சென்றால் கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேசப் பெருமாள் அருள்புரிகிறார்கள். 


சங்கு, சக்கரம் ஏந்திய தடக்கையராக, வரதஹஸ்தம், கடிஹஸ்தம் உடையவராக நான்கு கரங்களுடன் புன்னகை தவழ காட்சி தருகிறார். இருபுறமும் திருமகளும், நிலமகளும் நின்றருள் செய்கின்றனர். உற்சவ மூர்த்தங்களும் அதே திருநாமத்துடன் திகழ்கிறார்கள். 


திருக்கோவிலின் ஈசான்ய மூலையில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நவக்கிரக சன்னிதி அறுங்கோண வடிவில் தனி விமானத்தின் கீழ் இருப்பது சிறப்பு. 


மேலும் நவக்கிரகங்கள் அனைத்தும் வரிசை மாறி அமைந்திருக்கின்றன. வழக்கமாக நடுவில் இருக்கும் சூரியனுக்கு பதிலாக சந்திரன் நடுவில் உள்ளது. அதற்கு வலது புறத்தில் சாயாதேவி- உஷாதேவியுடன் சூரிய பகவான் இருக்கிறார். 


சனி தெற்கு நோக்கியும், அவரது நட்புக் கிரகங்களான புதன், சுக்ரன் இருபுறமும் இருக்க நவக்கிரகங்கள் காட்சி தருகின்றன. இவை வைணவ ஆலய விதிப்படி நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


பெருமாள் சன்னிதிக்கு நேரே கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. அதை ஒட்டியுள்ள மண்டப மேற்கூரையில் பன்னிரு ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளன. 


கொடி மரத்தின் முன், தங்களது ராசிக்குக் கீழ் நின்று பிரார்த்தித்துக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேல் விதானத்தில் ராமாயண, நரசிம்ம அவதாரக் காட்சிகள் சிறிய புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன. 


கோவிலை வலம் வரும் போது பிரகாரத்தில் மூலவரின் விமானத்தின் அருகே தலவிருட்சமான வில்வமரம் உள்ளது. சிவனுக்குரிய வில்வம் தல விருட்சமாக இருப்பது ஒரு சில திருமால் கோவில்களில் மட்டுமே. அந்த வகையில் இந்த ஆலயம் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. 


வெளிச் சுற்றில் அமிர்த வெங்கடேசர் தனிச் சன்னிதியிலும், தைத்யமர்த்தினி என்ற பெயரில் காவல் தெய்வமான அஷ்டபுஜ துர்க்கை, அருகே பட்டாபிஷேக ராமர், ஆஞ்சநேயர், கஜ சம்ஹார காட்சி சிறிய சிற்பங்களாக வழிபடப்படுகின்றன. 


திருமணம் தடைப்பட்டோர், சுவாமிக்கு திருமண உற்சவம் செய்து வைத்து, தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள். நவக்கிரக தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது. 


தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இவ்வாலயம், தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 


கலியுகத்தின் காக்கும் கடவுளான வேங்கடேசப் பெருமாளை நித்திய சொர்க்க வாசல் வழியே சென்று வழிபட்டு அனைவரும் நலம் பெறலாமே.

தெய்வங்களுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பது ஏன்...?

 தெய்வங்களுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பது ஏன்...?

           நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு(செப்பு) பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான். 

    அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது.

    அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. மேலும் அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.

    இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    
    ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும். குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

Thursday, July 15, 2021

நோய்களை தீர்க்கும் புண்ணிய தலமாக விளங்கும் திருத்தேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்

 நோய்களை தீர்க்கும் புண்ணிய தலமாக விளங்கும் திருத்தேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்.

 

நோய்களை தீர்க்கும் புண்ணிய தலமாக விளங்கும் திருத்தேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

 


கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூசித்த தலமாதலால் ஈஸ்வரர் கற்கடேஸ்வரர் ஆனார். தற்பாேது இக்கோவில் நண்டான்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஊர் திருந்துதேவன்குடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தார். தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை கோமுகம் இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது.

 

இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதை கண்காணித்த பொழுது நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வதுகண்டு வியந்தபோது உன்னால் நண்டாக சாபம் பெற்ற கந்தர்வனே மலர் கொண்டு பூசித்தான்.

 

உன்னை கண்டு பயந்து ஒளிந்து கொண்டுள்ளான் என ஈசனிடம் இருந்து அசரீரி கேட்டது. ஆடி அமாவாசை பூர நட்சத்திரத்தன்று காறாம் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்யும் போது லிங்கத்திருமேனியின் பிளவில் இருந்து பொன் நிற நண்டு வந்து காட்சி அளிக்கும் என்று வசிஷ்டமகாத்மியம் நூலில் கூறப்பட்டுள்ளது.

 

6-2-2003இல் கும்பாபிஷேக முதல் நாள் யாகபூசையின் போது யாககுண்டத்தை நண்டு வலம் வந்த அதிசயம் நடந்ததை கண்டதாக கூறப்படுகிறது.மன்னர் ஒருவர் கடும்நோயால் பாதிக்கப்பட்டு இவ்வாலய ஈசனை வேண்டி குணம் அடைந்தார். அம்மன்னன் பிரதிஷ்டை செய்த அம்மனே அருமருந்தம்மை ஆகும்.

 

இது நோய் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய் சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாக கருதப்படுகிறது. கோவில் வெளிப்புர சுவற்றில் மருத்துவர் மருந்து தயாரிப்பது போன்ற புடைப்புச்சிற்பம் காணப்படுகிறது.

 

அமைவிடம்

திருத்தேவன்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் திருவிசநல்லூர் அருகில் அமைந்துள்ளது.

 

வழிபட்டோர்

நண்டு பூசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில்

 நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில்.

 

நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும்.

 

NARASIMMAR TEMPLE

கோவில் அமைப்பு

 

இக்கோயிலின் மூலவர் நரசிம்மர் ஆவார். தாயார் நாமகிரி தாயார் ஆவார். நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது. மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார். இப்படி மூன்று அவதாரம் பெற்றிருப்பினும், நரசிம்மரே இங்குப் பிரதானம்.

 

முதலில் கோயிலுக்கு முன்னே அனுமார் கிழக்குத் திசை நோக்கியவராக 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார். அடுத்து நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் உள்ள சந்நிதி. நரசிம்மர் மிகவும் கம்பீரமாகப் பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது அமர்ந்து உள்ளார். நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ளார். திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளனர்.

 

நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரது பாதங்களைப் பார்த்து இருப்பதுபோல் அமைந்துள்ளது. கோட்டையின் மேற்குப்புறம் அரங்கநாதரைத் தரிசிக்கலாம். அரங்கநாதர் கார்க்கோடகன் மேல் தெற்கே தலையும் வடக்கே காலும் நீட்டிச் சயனித்திருப்பதைக் காணலாம்.

 

காலடியில் சங்கரநாராயணரைக் காணலாம். சற்றுப் பின்னால் அரங்கநாயகி தாயாரைக் காணலாம்.கீழே இறங்கி வந்தால் கமலாலயம். அது அனுமனுக்குத் தாகம் தீர்த்தது. அடுத்து மலையேறினால் வரதராஜரைத் தரிசிக்கலாம்.

 

இரண்யனை வதம் செய்த நரசிம்மர் யாரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சி தந்ததைக் கண்டு பிரகலாதன் வேண்டுதலுக்கு இணங்க சாந்தமூர்த்தியாகி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர, திருமகள் தனது நாயகனைப் பிரிந்ததால் இந்தக் கமலாலயத்தில் தவம் புரிய, சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம நரசிம்மரையும் எடுத்துக் கொண்டு வர, இந்தக் கமலாலயத்தைக் கண்டதும் தனது தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து நரசிம்மரைக் கையிலிருந்து கீழே வைக்க, தாகம் தீர்ந்ததும் நரசிம்மரைத் தூக்கினால் நரசிம்மர் வரவில்லை.

 

எவ்வளவு முயன்றும் அனுமனால் முடியவில்லை. இங்கே தான் நரசிம்மரை நினைத்து லட்சுமியும் தவம் புரியவே, அவளுக்கு நரசிம்மர் அருள் புரியவே இங்கே தங்கி விட்டதாகக் கூறுவர். அற்புதச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நாமக்கல் நரசிம்மர் வரம் தரும் விஷ்ணுவாகக் கருதப்படுகிறார். நரசிம்மரைக் கூப்பிய கரங்களுடன் சேவித்தவாறு அருள்மிகு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தவண்ணம் எழுந்து அருள்கின்றார்.

 

கல்வெட்டு

 

இந்தத் தலத்துக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள். 1300 ஆண்டுகளுக்குமுன் மகேந்திர வர்மன் குடைந்து அமைத்தவை. அதியேந்திர விஷ்ணு கிரகம் என்று இத்தலத்தைப் பற்றிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விழாக்கள்

 

நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகியவை இங்கு நடைபெறுகின்ற விழாக்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

 

ராமானுஜம் தொடர்பு

 

கணித மேதை ராமானுஜம் இத்திருக்கோயிலின் நாமகிரி தாயாரின் பக்தர். ராமானுஜம் அவர்களுக்குக் கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரி தாயார் விடை தந்துள்ளார். கடினமான கணக்குகளுக்குக் கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது கணித மேதை ராமானுஜத்தின் வழக்கம்.

x