Sunday, July 25, 2021

MAHA PERIYAVAA STORIES

 "நல்லெண்ணெய், வெளக்கெண்ணெய் வேப்பெண்ணெய்" 

''எல்லா கிரஹஸ்தாளும் வீடுகள்ல மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும்."

மகாபெரியவா மடத்துல இருந்த சமயம் அது. 

எத்தனை

எத்தனையோ பேர் அவரைத் தரிசிக்க தினமும் வருவார்கள்.


வயசானவர்கள், இளம் வயசுக்காரர்கள், சின்னக் குழந்தைகள்

இப்படியெல்லாம் எந்த வித்தியாசமும் இல்லாம, ஆண்கள்

பெரியவருக்கு  நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க

நமஸ்காரமும் பண்ணுவார்கள்.


(இரண்டு முழங்கால்கள், இரண்டு

முழங்கைகள், நெற்றித் தரையில படற மாதிரி முழங்காலை

மடக்கிச் செய்யறது பஞ்சாங்க நமஸ்காரம்).


(நெடுஞ்சாண்கிடையாக அப்படியே விழுந்து செய்யறது 

சாஷ்டாங்க நமஸ்காரம்.)



தன்னை மத்தவர்கள் நமஸ்காரம் செய்யறச்சே எல்லாம்

நாராயணா, நாராயணான்னு சொல்வார் ஆசார்யர். 


அதாவது

நமஸ்காரம் தனக்கு இல்லை. பகவானுக்குன்னு அர்த்தம்.


அந்தமாதிரி ஒரு சமயம் நடுத்தர வயசுப் பக்தர் ஒருத்தர்,

மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் செஞ்சுட்டு ரொம்ப

கஷ்டப்பட்டு முழங்கால்களை பிடிச்சுண்டு எழுந்திருந்தார்.


மகாபெரியவா அவரைக் கொஞ்சம் உத்துப் பார்த்தார்.


அந்தப் பார்வையோட அர்த்தத்தைப் புரிஞ்சுண்ட அந்த

பக்தர்,"முதுகுத் தண்டு பயங்கரமா வலிக்கிறது பெரியவா.


அலோபதிலேர்ந்து ஹோமியோபதி வரைக்கும் 

பார்த்துட்டேன். ஒண்ணும் கேட்கலை! குனிஞ்சு நிமிர்ந்தா

வலீல உசுரு போகறது!" அப்படின்னு சொன்னார்.


"தைல ஸ்நானம் பண்ணற (எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கற)

பழக்கம் இருக்கோ நோக்கு?" கேட்டார், மகாபெரியவா.


பெரியவா அப்படிக் கேட்டதும் கொஞ்சம் நெளிஞ்ச அவர்,

"இல்லை பெரியவா...முந்தியெல்லாம் பண்ணிண்டு 

இருந்தேன். இப்போ வேலை, வர்த்தகம் அது இதுன்னு

தினமும் இருக்கற அவசரத்துல வெறும் ஜலத்தைத் தலைல

விட்டுண்டு ஓடவேண்டியதா இருக்கு..!" சங்கடமாகச் சொன்னார்.


"ம்..எல்லாம் அவசர யுகமாயிடுத்து. செக்குல ஆட்டின

நல்லெண்ணெயை சரீரம் முழுக்க தேய்ச்சுண்டு நன்னா

ஊறினதும் அரப்புப் பொடி தேய்ச்சுக் குளிச்ச காலத்துல

யாருக்கும் இப்படி முதுகு வலி, மூட்டிவலியெல்லாம் வரலை..

இப்போ அவா அவா தேகத்தை கவனிச்சுக்கறதுக்குக்கூட நேரம்

இல்லைங்கறா..!"சொன்ன பரமாசார்யா மறுபடியும் தொடர்ந்தார்


"பழசை மறக்கக்கூடாதுன்னுட்டு, சனிநீராடுன்னு பாடத்துலயே

வைச்சு சொல்லிக் குடுத்தா. ஆனா படிச்சதையெல்லாம் யாரு

இப்ப  ஃபாலோ பண்றா? 


"நீ ஒண்ணு பண்ணு. இனிமேலாவது

வாரத்துக்கு ரெண்டு நாள் தைல ஸ்நானம் பண்ணு. மிளகு

ரசத்தையும், பிபெரண்டைத் தொகையலையும் அடிக்கடி

சேர்த்துக்கோ!"


பெரியவா சொல்ல, "அப்படியே செய்யறேன் பெரியவா..!"

பணிவாகச் சொல்லிட்டு பிரசாதம் வாங்கிக்கறதுக்காக கையை

நீட்டினார் அந்த பக்தர்.


"கொஞ்சம் இரு...இந்த சமயத்துல எல்லாருக்குமே பொதுவான

இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். அதையும் 

கேட்டுட்டுப் போ..!" 


பெரியவா சொல்ல, அவர் என்ன சொல்லப்

போறார்ங்கறதைக் கேட்க எல்லாரும் ஆர்வத்தோடு தயாரானா.


"எல்லா கிரஹஸ்தாளும் வீடுகள்ல மூணு தினுசு எண்ணெயை

எப்பவும் வைச்சு இருக்கணும்." 


"சுவாமிக்கு வெளக்கு ஏத்தவும்,

சமையல் பண்ணவும் நல்லெண்ணெய். இதுல சிலர் 

சமைக்கறதுக்கு நல்ல எண்ணெயும், சுவாமிக்கு கொஞ்சம் 

மட்டரகத்தையும் வாங்கறதா கேள்வி. அது தப்பானது. 


எப்பவுமே பகவானுக்கு ஒசத்தியானதைத்தான் தரணும்.


அடுத்தது வெளக்கெண்ணெய். பச்சைக் குழந்தையோ,

பெரியவாளோ உஷ்ணத்தால் வயத்துவலி வந்துட்டா, இது

கண்கண்ட மருந்து. 


நாபியைச் சுத்தி தடவிண்டா போதும்.

சட்டுன்னு குணம் தெரியும். அந்தக் காலத்துல ரொம்ப

ப்யூரான வெளக்கெண்ணெயை உள்ளுக்கே மருந்தா குடுப்பா.

வயத்தை சுத்தப்படுத்திடும்.


மூணாவது, வேப்பெண்ணெய். இதை யாரும் இப்போ

வாங்கறமாதிரியே தெரியலை. ஆனா இது மூட்டுவலிக்கு

சரியான ஔஷதம். வயசானவா தெனமும் இதை கை,கால்,

மூட்டுல தடவிண்டா, முட்டிவலி சுத்தமா வரவே வராது.


இன்னொரு முக்கியமான விஷயம். எண் ஜாண் ஒடம்புக்கு

சிரஸே ப்ரதானம்னு சொல்லுவா. ஆனா அந்த சிரஸுலேர்ந்து

தேகம் முழுக்க சௌகர்யமா இருக்கணும்னா, அதுக்கு

பாதத்தை பத்திரமா பார்த்துக்கறது ரொம்ப அவஸ்யம்.


ஸ்நானம் பண்ணி முடிச்சதும், தலையைத் தொடைச்சுக்கறது

மாதிரியே பாதத்தையும் அக்கறையா தொடைச்சுக்கணும்.


தெனோம் ராத்திரி தூங்கறதுக்கு முன்னால காலை நன்னா

அலம்பி, பாதத்தை ஈரம் போகத் தொடைச்சுக்கணும்.


பாதத்தை பத்திரமா பார்த்துண்டாலே தேகம் சீர்கெடாம

பத்திரமா இருக்கும்.


அந்தக் காலத்துல, வெளீல போய்ட்டு ஆத்துக்குத் திரும்பி

வந்தா, காலை நன்னா அலம்பிட்டு, வாய் கொப்பளிச்சுட்டுத்தான் உள்ளேயே நொழைவா! 


வெளி மனுஷா 

வந்தாலும் வாசல்ல கால் அலம்பச் சொல்லுவா. ஆனா

இன்னிக்கு வீட்டுக்கு உள்ளறை வரைக்கும் செருப்புக்காலோட

நடமாட ஆரம்பிச்சுட்டா.


அப்புறம் நோய் எப்படி வராம இருக்கும் ?! இதையெல்லாம்

சொன்னாலும் இப்போதைக்குக் கேட்டுக்கறவா, அப்புறம்

அதைக் கடைப்பிடிப்பாங்கறதுக்கு நிச்சயம் இல்லை. 


ஏதோ

சரீரத்துமேல அக்கறை உள்ளவாளுக்கு உப்யோகப்படுமேன்னு

சொன்னேன். புரிஞ்சுண்டா சரி!" சொல்லி முடித்த ஆசார்யர்,

பக்தருக்குப் பிரசாதம் குடுத்து அனுப்பினார்.


இது நடந்து ஒரு மாசம் இருக்கும். மறுபடியும் 

மகாபெரியவாளை தரிசிக்க வந்திருந்தார் அந்த பக்தர். 

இந்த முறை நெடுஞ்சாண்கிடையா ஆசார்யா திருவடியில

விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு, அப்படியே எழுந்து நின்னார்.


அந்த வேகமே அவரோட முதுகுவலி முழுசா

குணமாயிடுத்துங்கறதைக் காட்டியது.


மஹாபெரியவா திருவடிக்கே...

No comments:

Post a Comment